ஜிஎஸ்டி வரியை பூதம் என நினைத்து தொழில்துறையினர் பயப்படத் தேவையில்லை- நிர்மலா சீத்தாராமன்

ஜிஎஸ்டி வரியினை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை எனவும், ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நாட்டிற்கு பயனளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி வரி நடைமுறை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தொழில்துறையினை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி தொடர்பான தொழில் துறையினரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க அந்தந்த தொழில் வர்த்தக சபைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி கீழ்மட்ட ஊழலை ஒழிக்க சிறந்த திட்டம்.இத்திட்டத்தை எதிர்ப்பது நாட்டுக்கு நல்லத்தல்ல. ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் இரு மாதங்களுக்கு அதில் தொழில் துறையினர் தவறாக தகவல்கள் பதிவு செய்தாலும் அபராதம் வசூலிக்கப்படாது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது பாஜக அரசு மட்டும் கொண்டு வந்ததல்ல. இது அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டியை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நட்டிற்கு பயனளிக்கும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையினால் சுங்கச்சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் பாதியாக குறையும். ஜிஎஸ்டியினால் தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தவறான பிரச்சாரம்" என்றார். எனவும் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...