ஓ.பி.எஸ் அணி எம்எல்ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா அணியினரால் தவறான தகவல் பரப்பபடுகிறது- முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா அணியினரால் தவறான தகவல் பரப்பபடுகி்றது என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் இருந்த 4 எம்.எல்.ஏ-க்கள் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்தது என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசிடம் இருந்து அவர்கள் விலகி நிற்க விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது. அரசை நடத்துபவர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும். உண்மையான அதிமுகவாக தாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்து இருக்கக் கூடாது. 

ஜி.எஸ்.டி குறித்த சரியான புரிதல் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்கள் பேசிவருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பிய மாற்றங்களுடன் கூடிய ஜி.எஸ்.டி தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. 

ஜி.எஸ்.டி காரணமாக தமிழக அரசு பட்ஜெட்டில் 4000 கோடி வணிக வரி அதிகரிக்கும். நல்ல முறையில் பயிற்சிகளை வழங்க வேண்டும். அதிமுக புரட்சி தலைவி அணியில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் யாரும் அணி மாற வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிக்கு தொண்டர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. 

பாஜக அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து விரைவில் உயர்மட்ட குழு கூடி நல்ல முடிவை அறிவிப்போம். ஏற்கனவே மோடி - ஓ.பி.எஸ் சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளருக்கு பிரதமர் மோடி ஆதரவு கேட்டு இருந்தார். இரண்டு நாட்களில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து முடிவு செய்வோம்.

ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா தரப்பினரால் தவறான தகவல் பரப்பப்படுகின்றது. விரைவில் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது நடத்த வாய்ப்பில்லை" இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...