கோவை காந்திபுரம், காட்டூர் சோமசுந்தரம் மில்ஸ் சாலை என்.டி.சி பஞ்சாலை எதிரே உள்ள தீபக் (50) என்பவருக்கு சொந்தமான காண்டெக் ரப்பர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் தீபன் மசான் (22). இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இன்று தான் பணியாற்றும் நிறுவனக் கட்டிடத்தில் சரக்கு ஏற்றி செல்லும் லிப்டில் சென்ற போது, மேல் சுவற்றில் தலை மோதி உயிரியிழந்தார்.

தகவல் அறிந்த காட்டூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீபன் மசானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படும் இப்பகுதீயில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்த காட்டூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீபன் மசானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படும் இப்பகுதீயில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.