கோவை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவம் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யபிரியா (19). இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் தலை சுற்றல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சத்யபிரியா-வை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது இருதயத்தில் சிறிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



முதன் முறையாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள புதிய அறுவைசிகிச்சை இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. 25 நிமிடம் இருதய துடிப்பை நிறுத்தி மேற்கொள்ளும் இந்த சிகிச்சை மிகவும் நுணுக்கமானது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது 2 முதல் 3 லட்சம் வரை பணம் செலவாகும். எனவே, இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இனி பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...