கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை செம்மொழிப் பூங்காவில் இருந்து டாடாபாத் வரை கொடி அணிவகுப்பு நடத்துகிறது. இதனால், டவுன் பஸ் ஸ்டாண்ட், நஞ்சப்பா ரோடு, கிராஸ் கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் ஆர்.வி. ரவுண்டானா மற்றும் ஜி.டி சிக்னல் வழியாக மாற்றி விடப்படும்.


Coimbatore: கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை சார்பில் இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை கொடி அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இந்த அணிவகுப்பு செம்மொழிப் பூங்காவில் தொடங்கி நஞ்சப்பா ரோடு, கிராஸ் கட் ரோடு வழியாக டாடாபாத் வரை நடைபெறும். இதனால், பொதுமக்களின் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

செம்மொழிப் பூங்காவில் இருந்து அணிவகுப்பு தொடங்கும் போது, டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்கள் ஆர்.வி. ரவுண்டானா வழியாக மாற்றி விடப்படும். அதேபோல், அணிவகுப்பு கிராஸ் கட் ரோடு வழியாக செல்லும் போது, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜி.டி சிக்னல் வழியாக மாற்றி விடப்படும்.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...