குடிபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குடிமகன்

கோவை காந்திபுரம்- வேலாந்தாவளம் செல்லும் அரசு பேருந்து எண்: 48A இன்று மாலை 5 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து வேலாந்தவலம் நோக்கி சென்றது.

இந்த பேருந்தில் உக்கடத்தில் பூக்கடை வியாபாரம் செய்யும் செல்வராஜ் உக்கடத்தில் ஏறி சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் வரை செல்ல பயணச் சீட்டு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் அவர் மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறங்கிச் செல்ல வலியுறுத்தி உள்ளார். கிழே இறங்கிய செல்வராஜ் தரையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்தது.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை பிடித்ததுடன் போத்தனூர் காவல் நிலையதிற்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...