குடிபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குடிமகன்

கோவை காந்திபுரம்- வேலாந்தாவளம் செல்லும் அரசு பேருந்து எண்: 48A இன்று மாலை 5 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து வேலாந்தவலம் நோக்கி சென்றது.

இந்த பேருந்தில் உக்கடத்தில் பூக்கடை வியாபாரம் செய்யும் செல்வராஜ் உக்கடத்தில் ஏறி சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் வரை செல்ல பயணச் சீட்டு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் அவர் மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறங்கிச் செல்ல வலியுறுத்தி உள்ளார். கிழே இறங்கிய செல்வராஜ் தரையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்தது.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை பிடித்ததுடன் போத்தனூர் காவல் நிலையதிற்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...