மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி

மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது.



இந்நிலையில், இம்மையத்தின் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.



பாஜக-வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும்  மேற்பட்ட பெண்கள் பூத்தொடுக்கும் போட்டியில் பங்கேற்றனர். பின்னர், கனரா வங்கி சார்பில் பெண்களுக்கான சிறு தொழில் கடனுதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெண்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணரும் விதமாக இன்று பூத்தொடுக்கும் போட்டி நடைபெறுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தும் விதமான இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் பெண்கள், தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுகின்றனர். போட்டியில் வெற்றி பெரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.



தொடர்ந்து, கனரா வங்கியின் சார்பில் பெண்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சிறு தொழில்முனையும் பெண்களை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...