கோவையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வு இன்று (மே 18) நடைபெற்றது. நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித மரியண்னை மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கல் மேலநிலைப்பள்ளி, புனித காணிக்கை அன்னை மேல்நிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு மையமான சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்த தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,



மத்திய  அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 8748 நபர்களில் 3943 நபர்கள் தேர்வெழுதினர், 4805நபர்கள் தேர்வெழுதவில்லை. 



இத்தேர்வினை சிறப்பாக நடத்தவும், அவற்றினை கண்கானிக்கவும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கோவை மாவட்ட யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்களும் அனைத்து மையங்களிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், துணை ஆட்சியர் நிலையில் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அவற்களும் சிறப்பான முறையில் பணியாற்றினர். 

இத்தேர்வினை சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...