குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேர்கைக்கான குழந்தைகளைத் தெரிவு செய்யும் பணி 31.5.2017 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒருசிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தினால், நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் 20.6.2017 அன்று காலை 10 மணிக்குத் துறைசார்ந்த பிரதிநிதி முன்னிலையில் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.
எனவே, ஏற்கனவே இணையவழியாக விண்ணபித்துச் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் 20.6.2017 அன்று காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஏற்கனவே இணையவழியாக விண்ணபித்துச் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் 20.6.2017 அன்று காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.