நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ட்ரூக் மற்றும் பக்கா சூரன் மலையில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இதன் அருகாமையில் டான் டீக்கு சொந்தமான தேயிலை தோட்டமும் உள்ளது.
இந்த தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுயில் வசித்து வருகின்றனர். இதனிடையே, இவர்களது குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் அலுவலக பணிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 16) அப்பகுதி மக்கள் ட்ரூக் செல்லும் சாலையில் அமர்ந்து அங்கேயே சமையல் செய்து உண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "இந்த சாலையை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.
இந்த தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுயில் வசித்து வருகின்றனர். இதனிடையே, இவர்களது குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் அலுவலக பணிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 16) அப்பகுதி மக்கள் ட்ரூக் செல்லும் சாலையில் அமர்ந்து அங்கேயே சமையல் செய்து உண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "இந்த சாலையை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.