பதிவு செய்யப்பட்ட செயல்படாத நிறுவனங்கள் வங்கி கடன் பெற தவறான ஆவணங்களை தயாரித்து தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி கூறியதாவது:-
கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதிவு செய்தும் இருப்புநிலை ஆவணங்களை பதிவு செய்யாமல், செயல்படாமல் உள்ள ஷெல் நிறுவனங்கள் எனப்படும் 5 ஆயிரத்து 766 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்படும் இயக்குனர்கள் செயல்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இயக்குனராக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை இதனால் உருவாகும். செயல்படாமல் உள்ள 1500-க்கும் மேற்பட்ட இத்தகைய ஷெல் நிறுவனங்கள் வங்கிகளில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தாமல் இருப்பதால், இத்தகைய வாராக்கடன் மிகப்பெரிய பொருளாதார மோசடியாக கருதப்படும் எனவும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட உள்ளது.
இந்த ஷெல் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, கலால் மற்றும் வணிக வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது அத்துறைகள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான தொகை 36 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டு முழுமையாக இணையம் மூலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் மிக சுலபமாக நிறுவனங்களை பதிவு செய்ய முடியும்" என ஜோஸ்குட்டி தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இத்தகைய செயல்படாமல் இருந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்நிறுவங்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் போது அந்நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி கூறியதாவது:-
கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதிவு செய்தும் இருப்புநிலை ஆவணங்களை பதிவு செய்யாமல், செயல்படாமல் உள்ள ஷெல் நிறுவனங்கள் எனப்படும் 5 ஆயிரத்து 766 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்படும் இயக்குனர்கள் செயல்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இயக்குனராக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை இதனால் உருவாகும். செயல்படாமல் உள்ள 1500-க்கும் மேற்பட்ட இத்தகைய ஷெல் நிறுவனங்கள் வங்கிகளில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தாமல் இருப்பதால், இத்தகைய வாராக்கடன் மிகப்பெரிய பொருளாதார மோசடியாக கருதப்படும் எனவும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட உள்ளது.
இந்த ஷெல் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, கலால் மற்றும் வணிக வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது அத்துறைகள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான தொகை 36 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டு முழுமையாக இணையம் மூலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் மிக சுலபமாக நிறுவனங்களை பதிவு செய்ய முடியும்" என ஜோஸ்குட்டி தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இத்தகைய செயல்படாமல் இருந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்நிறுவங்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் போது அந்நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.