கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 68-வது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின், பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் மக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் 50 மைக்ரான் அளவிற்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளனவா என்று மைக்ரான் மீட்டர் கருவி மூலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி வணிகவளாகத்தையும், ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொது கழிப்பிடத்தையும் மற்றும் அப்பகுதியில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின், பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் மக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் 50 மைக்ரான் அளவிற்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளனவா என்று மைக்ரான் மீட்டர் கருவி மூலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி வணிகவளாகத்தையும், ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொது கழிப்பிடத்தையும் மற்றும் அப்பகுதியில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.