ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை கிராஸ்கட் வீதியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சட்டமன்றத்தில் வெளிடப்பு செய்யப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அதிமுகவினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



இதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில்  மறியலில் ஈடுபட்ட 36 பேரும் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக வழகறிஞர் அணியினர் 14 பேரும் கைது செய்யபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...