திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை கிராஸ்கட் வீதியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சட்டமன்றத்தில் வெளிடப்பு செய்யப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அதிமுகவினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 36 பேரும் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக வழகறிஞர் அணியினர் 14 பேரும் கைது செய்யபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் வெளிடப்பு செய்யப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அதிமுகவினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 36 பேரும் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக வழகறிஞர் அணியினர் 14 பேரும் கைது செய்யபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.