பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

கால்நடை மருத்துவர்களுக்கான ஒரே பதவி மற்றும் ஊதியம் என்ற நிலையை மாற்றும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி கால்நடை மருத்துவர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகள் வரை பதவி உயர்வு அற்ற நிலையில் ஒரே பதவியில் பணிபுரியும் நிலையினை மாற்றி அரசு ஆணை 49 ஐ அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2,768 மருத்துவர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 105 கால்நடை மருத்துவமனையில் உள்ள 85 மருத்துவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பணி உயர்வு குறித்து தமிழக அரசு விரிவாக ஆலோசித்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் பதவி உயர்வு பணி இடம் மாறுதல் செய்த ஆணைகளை வழங்கிய நிலையில் கடந்த மே மாதம் வெளியிட்ட அரசு ஆணை   திடீரென காரணம் சொல்லமால் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட அரசு ஆணையினை  உடனடியாக திரும்ப பெற்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை முன் வைத்து இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

அரசு ஆணை திரும்ப பெறவில்லை என்றால் மாநில குழு கூடி அடுத்த கட்ட போரட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டத்தால் கால்நடை பரமரிப்பில் பாதிக்காத வகையில் சில மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்களை கொண்டு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...