கோவை மாவட்டம் அன்னூர் அருகே அருகம்பாளையத்தில் புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அருகம்பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த வாரம் மதுபானக்கடை திறக்கபட்டது. இதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள்அரசு மதுபான கடையை அகற்றகோரி நேற்று முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களிடம் அன்னூர் வட்டாச்சியர் இருதயராஜ் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த போது, உடன்பாடு ஏற்படாததால் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடை திறக்கபடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி கடிதம் வழங்க கோரி கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குன்னத்தூரில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக 20 நிமிடம் கோவை - சத்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அருகம்பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த வாரம் மதுபானக்கடை திறக்கபட்டது. இதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள்அரசு மதுபான கடையை அகற்றகோரி நேற்று முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களிடம் அன்னூர் வட்டாச்சியர் இருதயராஜ் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த போது, உடன்பாடு ஏற்படாததால் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடை திறக்கபடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி கடிதம் வழங்க கோரி கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குன்னத்தூரில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக 20 நிமிடம் கோவை - சத்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.