மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமத்துவ கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை தடைசட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக அரசு ஒரு கண்டன அறிக்கை கூட விடமால் மெளனம் காப்பதாகவும், மத்திய அரசிடம் அடிமையாக தமிழக அரசு மாறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாடுகளை விற்பனை செய்ய விதித்த தடையை நீக்கவில்லை எனில், அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...