கூலிக்கு ஜவுளி பொருள் உற்பத்தி செய்வோரின் சேவை வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு - சைமா பாராட்டு

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பை கொடுத்து வரும் ஜவுளித் தொழிலில் பெரும்பாலான உற்பத்தி கூலிக்கு சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் குறிப்பாக கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, சாயப்பட்டறை போன்ற துறைகளினால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கலால் வரி திட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலிக்கு சேவை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் குறைந்தபட்ச வரியான 5 சதவீத வரியை விதிப்பதன் மூலம் மேற்கண்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் இடுபொருட்கள் மீதான வரியை கழித்து மீதி வரியை செலுத்த இயலும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று சரக்கு மற்றும் சேவை வரிக்குழு 16-வது கூட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலியின் மீதான சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறித்து அறிவித்துள்ளது.

சைமா தலைவர் எம்.செந்தில்குமார் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தமது வேண்டுகோளை ஏற்று ஜவுளி உற்பத்தி கூலி சேவை வரியை 5 சதவிகிதமான குறைத்தமைக்கு ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் சார்பாக தனது நன்றிகளை நிதியமைச்சருக்கும், ஜவுளித்துறை அமைச்சருக்கும், தென் மாநில முதலமைச்சருகும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் சைமா அனைத்து ஜவுளி உற்பத்தி கூலிக்கும் 5 சதவிகித வரியை விதிக்க கோரியிருந்தது. ஆயத்த ஆடை மற்றும் விரிப்பு துணிகள் இவற்றில் விடுபட்டு இருப்பது ஜவுளி உற்பத்தியிலேயே அதிக வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் இத்துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்குழு கூட்டத்தில் ஆயத்த ஆடை, விரிப்பு மற்றும் இதர மதிப்பு கூட்டுப் பொருட்களை கூலிக்கு தயார் செய்யும் அனைத்து துறைகளையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைமா தலைவர் மேலும் கூறுகையில், செயற்கை பஞ்சு மற்றும் நூல் மீதான வரியை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை நினைவுகூர்ந்து வரும் 18 ஆம் தேதி உரிய அறிவிப்பை விடுக்க நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பாலியஸ்டர் மற்றும் இதர பஞ்சு மற்றும் நூலின் மூலம் தயாரிக்கப்படும் துணை பெரும்பாலும் பாமர மக்களால் பயன்படுத்தப்படுவதாலும், பல்வேறு அரசுகளின் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை திட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாலும், அரசு இத்துணிகளின் விலையை வரிவிதிப்பினால் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, ஏற்கனவே விடுத்துள்ள இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலனை செய்து செயற்கை இழை மற்றும் நூலின் மீதான வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கும் என்று சைமா தலைவர் எம்.செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...