கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 2-வது வார்டுக்குட்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு மெயின் ரோடு, லவ்லி கார்டன் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தையும், நேரு வீதி, காந்தி வீதி ஆகிய பகுதிகளில் ரூ.7.70 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு பகிர்மானக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.

இதனிடையே, லவ்லி கார்டன் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வில் ஈடுபட்டபோது 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தையும், நேரு வீதி, காந்தி வீதி ஆகிய பகுதிகளில் ரூ.7.70 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு பகிர்மானக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.

இதனிடையே, லவ்லி கார்டன் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வில் ஈடுபட்டபோது 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.