அதிமுக இரு அணிகளுக்கு இடையே கட்சி சண்டை இல்லை எனவும், நடப்பது பதவி சண்டை தான் எனவும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்

சூலூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியை சேர்ந்தவருமான கனகராஜ் கோவை மாவட்டம் சூலுரை அடுத்த காமநாய்க்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தனியார் தொலைக்காட்சியில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாக ஒளிபரப்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லததால் தனது எதிரிகள் பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், பெரும்பான்மையை நிருபிக்கவே கூவத்தூரில் தங்கி இருந்ததாகவும் விளக்கம் அளித்தார். 

கூவத்தூரில் பணப்புழக்கம் எதுவும் நடக்கவில்லை எனவும், சில அதிமுக உறுப்பினர்கள் ஒ.பன்னீர்செல்வம் பக்கம் செல்வதற்கு திமுகவினர் தான் காரணமெனவும் அவர் தெரிவித்தார். எம்.எல்.ஏ சரவணன் யார் என்றே தெரியாது எனவும், அவர் கூறிய புகார் குறித்து முழுமையாக அறிந்து வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் தனது அணிக்கு வருமாறு நேரடியாக அழைப்பு விடுத்தாகவும், அவரை விட எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுவார் என்பதால் ஒபிஎஸ் அணிக்கு செல்லவிலை எனவும் கனகராஜ் தெரிவித்தார். இரு அணிகள் இணைவதை மக்கள் ஏற்க தயாராக இருப்பதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை மக்கள் வெறுக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை 70 நாட்கள் காட்டாமல் வைத்திருந்ததே காரணமென அவர் தெரிவித்தார். 

மேலும் ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்ததாக புரளி பரவியதாகவும், அவர் கொலை செய்தாரா, இல்லையா என்பது ஆண்டவனுக்கே தெரியும், எங்களுக்கு தெரியாது எனவும் கனகராஜ் தெரிவித்தார். அதிமுக இரு அணிகளும் இணைய தயாராக இருப்பதாகவும், இரு அணிகளுக்கு இடையே கட்சி சண்டை நடக்கவில்லை எனவும், நடப்பது பதவி சண்டை தான் எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை அளிக்க வேண்டுமென அவரது தரப்பினர் சொல்வதே இணைப்பிற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...