கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த தடையினை திரும்ப பெற வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாடு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதித்த தடையினை திரும்ப பெற வேண்டுமெனவும், உணவு உரிமையை மத்திய அரசு தலையிட கூடாது எனவும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.