தீத்திபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

கோவை மாவட்டம், தீத்திபாளையத்திற்கு உட்பட்ட ஐயாசாமி மலை அடிவாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காட்டு யானை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனை பிடித்து சிகிச்சை அளிக்க கும்கி யானை பாரியுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட காட்டு யானை, கடந்த சில தினங்களாக தீத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்து கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதன் தாக்குதலால் தற்போது வரை மூன்று மாடுகள், ஒரு ஆடு காயம் அடைந்துள்ளது. மேலும், ஒரு கன்றுக்குட்டி பலியாகியுள்ளது. தொடர்ந்து இந்த காட்டு யானையால் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

புதனன்று, இந்த யானை கோவைப்புதூரில் அமைந்துள்ள பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டு இடத்தில் சுற்றித்திரிந்துள்ளது.

எனவே, இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் கும்கி யானையான பாரியின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது ஐயாசாமி மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் இந்த காட்டு யானைக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. செய்வதறியாது இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தியும், வளர்ப்பு கால்நடைகளை தாக்கியும் வருகிறது. இந்த யானையை பிடித்து மாற்று இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படவுள்ளது" என்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...