டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பள்ளி சீருடையுடன் மாணவர்கள் போராட்டம்


கோவை ராஜாவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராஜாவீதி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் வந்த மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடை முன்பாக இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகே செயல்படும் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி திறக்கும் முன்பாக அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுபானக் கடையினால் மாணவர்களுக்கு குடிபழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதுகுடிப்பவர்களினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...