வெள்ளலூரில் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென வெளியேரிய காட்டு யானை போத்தனூர் அருகே 4 பேரை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும், யானை தாக்குதலால் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகளைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமாரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள யானையைக் காண அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனிச்சாமி என்பவரை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, மதுக்கரைக்கு உட்பட்ட குறும்பப்பாளையத்தில் செயல்பட்டு வந்த கடை ஒன்றையும் இந்த யானை உடைத்து சேதப்படுத்தியதாகவும், மேலும், இரண்டு நாட்களாக இந்த யானை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அதிக ஆக்ரோஷத்தோடு சுற்றி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, காட்டு யானை தொடர்ந்து மக்களை தாக்கி வருவதால் வெள்ளலூர் பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சமம்பவ இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கோட்டாட்சியர் மதுராந்தகி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.



இதனைத்தொடர்ந்து, உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் இந்த யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவளைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...