காட்டு யானை தாக்கி வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவர் காயம்

தமிழக வனத்துறை வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.

அறிவொளி நகர், குரும்பம்பாளையம், பி.கே.புதூர், தர்மலிங்கேஷ்வரர் கோவில், ராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஒற்றை காட்டு யானை சுற்றிவந்துள்ளது.

இதனை தடுத்து, மதுக்கரைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அந்த யானையினை விரட்ட வனத்துரையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை அங்கிருந்த கார்த்திகேயன் மற்றும் விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளது.

இதில், இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேட்டைத்தடுப்பு காவலர் கார்த்தியேனுக்கு அதிகப்படியான காயங்கள் மற்றும் உடலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...