தமிழக வனத்துறை வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.
அறிவொளி நகர், குரும்பம்பாளையம், பி.கே.புதூர், தர்மலிங்கேஷ்வரர் கோவில், ராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஒற்றை காட்டு யானை சுற்றிவந்துள்ளது.
இதனை தடுத்து, மதுக்கரைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அந்த யானையினை விரட்ட வனத்துரையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை அங்கிருந்த கார்த்திகேயன் மற்றும் விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளது.
இதில், இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேட்டைத்தடுப்பு காவலர் கார்த்தியேனுக்கு அதிகப்படியான காயங்கள் மற்றும் உடலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.
அறிவொளி நகர், குரும்பம்பாளையம், பி.கே.புதூர், தர்மலிங்கேஷ்வரர் கோவில், ராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஒற்றை காட்டு யானை சுற்றிவந்துள்ளது.
இதனை தடுத்து, மதுக்கரைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அந்த யானையினை விரட்ட வனத்துரையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை அங்கிருந்த கார்த்திகேயன் மற்றும் விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளது.
இதில், இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேட்டைத்தடுப்பு காவலர் கார்த்தியேனுக்கு அதிகப்படியான காயங்கள் மற்றும் உடலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.