கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளை பிடிக்கும் பணியினை மேற்கொண்டு, விதி மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால், குழு அமைக்கப்பட்டு அதன் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பல்வேறு அறிவுறுத்தலுக்கு பின்னறும் முறையாக பராமரிக்காமல் பொது மக்களுக்கு இடையூராக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், பிடிக்கப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிமையாளர்கள் திரும்ப பெறாவிட்டால் அவற்றை மாநகராட்சியின் மூலம் நரசிபுரம் கிராமத்தில் செயல்படும் வெள்ளிங்கிரி கோசாலையில் விடப்படவேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிக்காக மாநராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால், அமைக்கப்பட்ட குழு பற்றிய விவரம்:

1. மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி மற்றும் அதன் அறிக்கையினை ஆணையர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

2. சுகாதார ஆய்வாளர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக செயல்பட்டு ஆய்வின் போது மண்டல சுகாதார அலுவர்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும்.

3. மாநகர நல அலுவலர், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவர்களாக செயல்பட்டு மண்டல சுகாதார அலுவலர்கள் சமர்பிக்கும் அறிக்கையினை ஒருங்கிணைத்து ஆணையர் மற்றும் துணை ஆணையர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வுத்தரவு உடன் அமலுக்கு வருகிறது. மேலும், அந்தந்த  மண்டலத்திலுள்ள சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு அந்தந்த மண்டல குழுவே பொறுப்பேற்க வேண்டும். என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...