திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியதாவது:-
மிருகவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாட்டு இறைச்சி சாப்பிடவோ, பயனில்லாத மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரை சுற்றியே அரசியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவரும் சந்தித்ததாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.
தனியார் பால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாலில் இரசாயன கலப்பு இல்லை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பால் தரம் குறித்த சோதனை உண்மையா அல்லது வெற்று சவாலா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
திராவிட நாடு, தனி தமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது. தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களையும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷ கருத்துக்களையும் பரப்பி வந்ததாலேயே மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை பாஜக சைவ நாடாக மாற்ற முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்-யை பாஜக இயக்கவில்லை.
மத்திய அரசின் நலத்திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. தமிழக பாஜக தொடர்ந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாது என கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியதாவது:-
மிருகவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாட்டு இறைச்சி சாப்பிடவோ, பயனில்லாத மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரை சுற்றியே அரசியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவரும் சந்தித்ததாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.
தனியார் பால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாலில் இரசாயன கலப்பு இல்லை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பால் தரம் குறித்த சோதனை உண்மையா அல்லது வெற்று சவாலா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
திராவிட நாடு, தனி தமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது. தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களையும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷ கருத்துக்களையும் பரப்பி வந்ததாலேயே மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை பாஜக சைவ நாடாக மாற்ற முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்-யை பாஜக இயக்கவில்லை.
மத்திய அரசின் நலத்திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. தமிழக பாஜக தொடர்ந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாது என கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.