திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியதாவது:-

மிருகவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாட்டு இறைச்சி சாப்பிடவோ, பயனில்லாத மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரை சுற்றியே அரசியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவரும் சந்தித்ததாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

தனியார் பால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாலில் இரசாயன கலப்பு இல்லை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பால் தரம் குறித்த சோதனை உண்மையா அல்லது வெற்று சவாலா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

திராவிட நாடு, தனி தமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது. தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களையும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷ கருத்துக்களையும் பரப்பி வந்ததாலேயே மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவை பாஜக சைவ நாடாக மாற்ற முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்-யை பாஜக இயக்கவில்லை. 

மத்திய அரசின் நலத்திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. தமிழக பாஜக தொடர்ந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. 

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாது என கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...