கோவையில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து


கோவை இராமநாதபுரம் பகுதியில் ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இங்கு அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வந்து செல்வர். 

இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்-யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த மருத்துவ கழிவுகள் மீது தீ பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் அந்த தீ அறையில் இருந்த குளிர்சாதன கருவியும் (ஏ.சி) தீப்பிடித்து எரிந்தது. 

இதையடுத்து ஊழியர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவியது.



இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றினர். பின்னர் அவசர சிசிக்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளை மீட்டு தயாராக இருந்த ஆம்புலன்சுகளில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரத்தில் பிரபலமான ஜெம் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவமனையில் தீ பற்றியவுடன் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...