பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்பட அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள், கூலிங் பெயிண்ட், பச்சை நிற மேட் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 98 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படி செல்லும் பக்தர்கள் வெயில் காரணமாக கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது கால்கள் சுடுவதால் சிரமம் அடைகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற கூலிங் பெயிண்ட் அடித்தல், அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், மருதமலை, கோனியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோயிலில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வலம் வர தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தை சுற்றி தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. கோனியம்மன் கோயிலில் முதலில் கூலிங் பெயிண்ட் அடித்த போதும், பக்தர்கள் கால்கள் சுடுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பச்சை நிற மேட் கோயில் பிரகாரத்தில் போடப்பட்டுள்ளது. இது நல்ல பலன் அளித்துள்ள நிலையில், மாநகரில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களிலும் பச்சை நிற மேட் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பக்தர்கள் வெயிலின் சூடு பாதிக்காத வகையில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...