எம்ஜிஆர் சத்துணவு திட்டப் பள்ளி மையங்களில் அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் சத்துணவு திட்டப் பள்ளி மையங்களில் அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோரில் பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பழங்குடியினர் குறைந்தபட்சம் 8 அம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோரில் பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தியடைந்து 40 வயதிற்கு மிகாமலும், பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். காலிப் பணியிட மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் அதிகபட்சம் 3 கிலோ மீட்டல் தூரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றும், இருப்பிடத்திற்கு அத்தாட்சியான குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், வயது சரிபார்க்க அத்தாட்சி நகல், பிற தேவைப்படும் சான்றுகளின் நகல்கள் அனைத்தையும் விண்ணப்பத்துடன் தவறாமல் இணைக்க வேண்டும்.

அமைப்பாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்யப்படும்.

காலிப்பணியிடம் மற்றும் இனச்சுழற்சி விபரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்படும். அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளை இணைத்திருக்க வேண்டும். 

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் மே 29ம் தேதி (இன்று) முதல் வரம் ஜூன் 9ம் தேதி வரை அளித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இனசுழற்சி முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். வேறு அலுவலகங்களிலோ மற்ற அலுலர்களிடமோ அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது" இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சிய வெளியிட்டுள்ள செதிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...