இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்.


இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து போத்துனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ள மத்திய அரசு மிருகவதைக்கு எதிராகவும் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து, எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது., அதில் குறிப்பாக கால்நடைகள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் போது துன்புறுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் போத்தனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாட்டின் தோலை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசு, ஜனநாயக நாட்டில் மாட்டிறைச்சி உணவு உண்ணுவதற்கு தடை விதிப்பதை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...