டும், டும், டும்... திருப்பூர் டாஸ்மாக்குல இலவசமா சரக்கு குடுக்குறாங்கோ...!!

நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்லாயிரக் கணக்கான பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிதாக டாஸ்மாக் கடையினை அமைப்பது மட்டுமல்லாமல் அங்கு குடிமகன்களுக்கு இலவசமாக மதுபானங்களையும் விநியோகித்து விளம்பரப்படுத்தி வருவது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை அதிர்ப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.



என்னங்க சொல்றிங்க, கூட விலை வெச்சு விக்குற கடையில இலவசமா சரக்கு கொடுக்குறானுங்களா ? என்று பலரது மனதிலும் கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆம், அவ்வாறான ஒரு சம்பவம் தற்போது திருப்பூர், கஞ்சம்பாளையம் பகுதியில் நடந்துள்ளது.

திருப்பூருக்கு உட்பட்ட கஞ்சம்பாளையம், ராதா நகரில், நேற்று புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையினை டாஸ்மாக் நிர்வாகத்தினர் திறந்துள்ளனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள குடிமகன்களுக்கு இந்த கடை திறக்கப்பட்டது குறித்து தெரியாததால் மதியம் வரை கூட்டம் வரவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மதுபிரியர்களை ஈர்க்க நினைத்த அந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் முதலில் கடைக்கு வந்த குடிமகன்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை கொடுத்துள்ளனர். இந்த தகவல் ஊர்முழுக்க பரவ, அடுத்த சில மணி நேரத்தில் இந்த மதுக்கடையில் நூற்றுக் கணக்கான குடிமகன்கள் குவிந்தனர். இந்நிலையில், கூட்டம் அதிகமானதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மதுகொடுத்துவிட்டு பின்னர் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தது மட்டுமின்றி இலவசமாக மதுபானம் விநியோகித்தது திருப்பூர் மக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று முழக்கமிட்டனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்று காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பெண் ஒருவர் கூறுகையில், பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு நிர்வாகம் அதனை அறுக்க ஆண்களுக்கு வீதிதோரும் இலவசமாக மது வழங்கி வருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்த டாஸ்மா கடையினை அகற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...