டும், டும், டும்... திருப்பூர் டாஸ்மாக்குல இலவசமா சரக்கு குடுக்குறாங்கோ...!!

நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்லாயிரக் கணக்கான பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிதாக டாஸ்மாக் கடையினை அமைப்பது மட்டுமல்லாமல் அங்கு குடிமகன்களுக்கு இலவசமாக மதுபானங்களையும் விநியோகித்து விளம்பரப்படுத்தி வருவது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை அதிர்ப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.



என்னங்க சொல்றிங்க, கூட விலை வெச்சு விக்குற கடையில இலவசமா சரக்கு கொடுக்குறானுங்களா ? என்று பலரது மனதிலும் கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆம், அவ்வாறான ஒரு சம்பவம் தற்போது திருப்பூர், கஞ்சம்பாளையம் பகுதியில் நடந்துள்ளது.

திருப்பூருக்கு உட்பட்ட கஞ்சம்பாளையம், ராதா நகரில், நேற்று புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையினை டாஸ்மாக் நிர்வாகத்தினர் திறந்துள்ளனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள குடிமகன்களுக்கு இந்த கடை திறக்கப்பட்டது குறித்து தெரியாததால் மதியம் வரை கூட்டம் வரவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மதுபிரியர்களை ஈர்க்க நினைத்த அந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் முதலில் கடைக்கு வந்த குடிமகன்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை கொடுத்துள்ளனர். இந்த தகவல் ஊர்முழுக்க பரவ, அடுத்த சில மணி நேரத்தில் இந்த மதுக்கடையில் நூற்றுக் கணக்கான குடிமகன்கள் குவிந்தனர். இந்நிலையில், கூட்டம் அதிகமானதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மதுகொடுத்துவிட்டு பின்னர் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தது மட்டுமின்றி இலவசமாக மதுபானம் விநியோகித்தது திருப்பூர் மக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று முழக்கமிட்டனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்று காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பெண் ஒருவர் கூறுகையில், பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு நிர்வாகம் அதனை அறுக்க ஆண்களுக்கு வீதிதோரும் இலவசமாக மது வழங்கி வருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்த டாஸ்மா கடையினை அகற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...