உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு வங்கி கோயம்புத்தூரின் வைஷ்னவி பாலாஜி நமது சிம்ப்ளிசிட்டி நிரூபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:-

கோவையில் புட் பேங்க் கோயம்புத்தூர் அமைப்பினை துவங்கும் போது எங்களிடம் 4 உறுப்பினர்களே இருந்தனர். தற்போது, நேரடியாக 200 உறுப்பினர்கள் இணைந்து உணவின்றி தவிக்கும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். எங்களது முக்கிய குறிக்கோள் பசியற்ற தேசத்தை உருவாக்குவதே ஆகும். 

வரும் மே 28 ஆம் தேதி உலக பசி தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 27ம் தேதியன்று கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, புட் பேங்க் கோயம்புத்தூரின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆவணப்படத்தையும் திரையிட உள்ளோம்.

மேலும், உலக பசி தினமான 28ம் தேதியன்று குழந்தைகள் மூலம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் குழந்தைகளிடத்தில் சமூகத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கும். மேலும் அவர்கள் உணவின் முக்கியத்துவத்தையும், பசியை ஒழிப்பதற்கான வழிகளையும் கற்றுக்கொள்வார்கள். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, வஉசி பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசித்தோருக்கு உணவு வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு மற்றும் உணவு இயக்கத்தில் சேர விரும்பும் குழந்தைகள் உணவு வங்கி கோயம்புத்தூரில் தொடர்பு கொள்ளலாம். இது பசி இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு எங்களது 160-வது முயற்சி ஆகும்" என்றார். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...