விவசாய நிலத்தில் கழிவுகளை சேர்க்கும் தனியார் நிறுவனங்களைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கழிவுகளை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய நிலங்களில் விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள பயனியர் பெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால், அருகம்பாளையம், ராசிபாளையம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல ராசிபாளையம், முத்துகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுகிரகா வால்வ்ஸ், ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ், பயனியர் பிளைவுட் கம்பெனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கழிவுகளை விவசாய நிலங்களில் விடும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தனியார் நிறுவனங்கள் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உப்பு கலந்த நீரை கால்நடைகளுக்கு குடிக்கக் கூட கொடுக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம் பாழ்பட்டு வருவதால் விவசாயிகள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...