உக்கடம் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவை உக்கடம் குளத்தில் மூழ்கி தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் குளத்தில், நேற்று (ஞாயிறு) மாலை கல்லூரி மாணவர் ஒருவர் குளத்தில் நடந்து சென்று மூழ்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் சிலர் அவரை தடுத்து குளக்கரையில் விட்டு உள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் சென்ற பின்னர் அந்த மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இன்று காலை உக்கடம் குளத்தில் சடலமாக உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த தனுஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தவரை, மீனவர்கள் காப்பாற்றிய போதும், மீண்டும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அந்த மாணவர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளதாக அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...