உதகை கேட்டியில் தெற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படையின் 82வது பயிற்சி முகாம்

1962ம் ஆண்டு இந்தியாவின் மீதான சீன அத்துமீறலின் போது நிறுவப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படை அரசு ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களை பாதுகாப்பதற்காக பயிற்சி அளித்து வருகிறது. அந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் இல்லாமல் காப்பது, மற்றும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள உதவுவது போன்ற சேவைகளில் இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில்வே ஒரு முக்கியமான பொது சேவையாக இருப்பதால், ரயில்வேயில் அத்தகு அந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது சிறப்பாக செயல்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள், பயணிகள் ஆகியோரை காப்பதற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படை பணியாற்றி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இப்படையில் தெற்கு ரயில்வே பிரிவுக்கு துணைப் பொதுமேலாளர் தலைமை இயக்குநராக உள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி முகாமை வெவ்வேறு இடங்களில் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதன் 82-வது பயிற்சி முகாமை, உதகை கேத்தி ரயில் நிலையம் பின்புறம் உள்ள சாரணசாரணியர் கட்டிடத்தில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா துவக்கி வைத்தார். தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை முன்னாள் தலைமை இயக்குநர் பி.இளங்கோவன், தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை துணை இயக்குநர் மற்றும் தெற்கு ரயில்வே முதுநிலை துணைப் பொதுமேலாளர் ஆர். முரளி மற்றும் தெற்கு ரயில்வேயின் இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இப்பயிற்சி முகாமிற்கு பொதுமகக்கள் பாதுகாப்புப் படையின் முதுநிலை ஆய்வாளர் பி. ரகுநாதன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இருந்து புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 130 ரயில்தடப்பராமரிப்புப் பணியாளர்கள் பங்கேற்று, முதலுதவி, தீயணைப்பு மற்றும் இதர மீட்பு நடவடிக்கைகளில் பயிற்சி பெற உள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...