குன்னூரில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 125 வருட பழமையான மரம் முறிந்து வாகனங்கள் சேதம்


நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமாதகாலமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் பெய்த பலத்த மழையில் குன்னூர் பி.டபில்யூ. வளாகத்தில் இருந்த 125 வருட பழமையான மரம் முறிந்து டிடிகே சாலையில் இருந்த டிரண்ஸ் பார்மர் மீது விழுந்தது. மேலும், அவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன.



இதனிடையே, இன்று அதிகாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காந்திபுரம் அருகே கேரளாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார் மீது பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததால் பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தோர் காயமடைந்தோரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...