சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி?


காவிரி பிரச்சினை குறித்து பேசியதற்காக  சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியை விமர்சனம் செய்யும் அளவிற்கு ரஜினி பேசியதற்கும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி  இதனை தெரிவித்தார். மேலும் இரு அணிகள் இணைப்பிற்கான குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது எனவும் இரட்டை இலை மீட்கவேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறினார். காவிரி பிரச்சினையில் சத்யராஜ் படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய ஆட்சியை பற்றி விமர்சிக்கும் படி ரஜினி பேசுவது சரியல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தன்னை விமர்சனம் செய்தவர்களை பற்றி பாராட்டி பேசிய ரஜினி, ஆட்சியை விமர்சிக்கும் படி பேசி இருப்பதாகவும்  தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு நன்றாக இருப்பதற்கு சட்டம் ஓழுங்கு நன்றாக இருப்பதே காரணம் எனவும் நடிகர்கள் பேசும் போது பார்த்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...