கோவை பீளமேட்டை அடுத்த வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜ வேலன். இவரது மகள் ஷாலினி (16) அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இன்று தேர்வு முடிவுகள் வெளியாவதை நினைத்து அச்சம் கொண்ட ஷாலினி நேற்று மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஷாலினி பலியானார்.
ஆனால், இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி ஷாலினி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். மாணவி ஷாலினி தற்கொலை குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.