கோவை மாநகராட்ச்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 274 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 384 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி .அணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியின் படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
மேலும், இத்தடை உத்தரவினை மீறி செயல்படுவோர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
அதன்படி, இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் மே 5ம் தேதியன்று 89 கடைகளில் 375.5 கிலோவும், மே 13ம் தேதியன்று 13 253 கடைகளில் 377 கிலோவும் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 15 முதல் இன்று மே 19 வரை ஐந்து மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 274 கடைகளில் 384 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு அபாதம் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியின் படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
மேலும், இத்தடை உத்தரவினை மீறி செயல்படுவோர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
அதன்படி, இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் மே 5ம் தேதியன்று 89 கடைகளில் 375.5 கிலோவும், மே 13ம் தேதியன்று 13 253 கடைகளில் 377 கிலோவும் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 15 முதல் இன்று மே 19 வரை ஐந்து மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 274 கடைகளில் 384 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு அபாதம் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.