சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் கடையை அடைத்து நொறுக்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றதும், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் மட்டும் வெளியூர் மக்கள் வந்து செல்வர். 



இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது. இதில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையும் அடங்கும். 



அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இருப்பினும், அந்த டாஸ்மாக் கடையில் கள்ளத்தனமாக தினமும் மது விற்பனை தொடர்ந்துகொண்டே வந்தது. 



இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்து வந்தனர். எனினும் அரசு அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இன்று காலை 11.30 மணியளவில் சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையினையும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் அடித்து நொறுக்கினர்.



இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்காநல்லூர் காவல்நிலையத்தின் அருகிலேயே இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தமிழக காவல்துறை டாஸ்மாக் கடைகளுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, டாஸ்மாக் கடை நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்ததே இதற்குக் காரணம். இந்த கடை நடத்த இடமளித்த கட்டிட உரிமையாளர் மீதும், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...