பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றச்சாட்டு


நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.



முத்தலாக் விவகாரம் தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் பெண்கள் அணி பொறுப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக குற்றம்சாட்டினார்கள். 

மேலும், கற்பழிப்புகளுக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் கொண்டு வராத பாஜக அரசு, முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதேன் என கேள்வி எழுப்பினர்.

சிலர் தவறாக தலாக் முறையினை பயன்படுத்துவதால் ஒட்டு மொத்த சட்டத்தையும் தவறாக பாஜக சித்தரித்து பிரச்சனையாக்குவதாகவும், இது முழுக்க அரசியல் சதித்திட்டம் எனவும் கூறிய அவர்கள், இஸ்லாமிய பெண்களை பாதுகாக்க வேண்டிய எண்ணம் பாஜக-விற்கு கிடையாது என தெரிவித்தனர். மேலும், பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதகமானது எனவும் அவர்கள் கூறினர்.

இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வருகின்ற மே 20 ஆம் தேதி பெண்களுக்கான பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...