கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை - ஒற்றை சாளர முறைகோரி மனு

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை போல கலைக் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மதிமுக-வினர் இன்று கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர், கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில், தமிழகத்தில் உள்ள கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஈஸ்வரன், தமிழகத்தில் இந்தாண்டு 7 லட்சம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை போல, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த வேண்டும்.

ஒற்றை சாளர முறையினை அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும், மதிப்பெண்களுக்கு ஏற்ப விரும்பிய கல்லூரி மற்றும் பாடங்களை தேர்வு செய்ய முடியும்" என ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...