கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை - ஒற்றை சாளர முறைகோரி மனு

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை போல கலைக் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மதிமுக-வினர் இன்று கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர், கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில், தமிழகத்தில் உள்ள கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஈஸ்வரன், தமிழகத்தில் இந்தாண்டு 7 லட்சம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை போல, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த வேண்டும்.

ஒற்றை சாளர முறையினை அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும், மதிப்பெண்களுக்கு ஏற்ப விரும்பிய கல்லூரி மற்றும் பாடங்களை தேர்வு செய்ய முடியும்" என ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...