கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



உப்பிலிபாளையம் முதல் கே.எம்.சி.ஹெச் வரையிலான பகுதியில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் இரு புறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தற்போது நிழற்குடை இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலம் மற்றும் கோடைக்காலங்களில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிறுத்தங்களில் புதிதாக நிழற்குடை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பழுதடைந்துள்ள நிழற்குடைகளை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பேருந்து நிறுத்தங்களின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தார். புதிய நிழற்குடை அமைக்க வேண்டிய இடங்கள் மற்றும் பழுதடைந்த நிழற்குடைகளை புனரமைக்க வேண்டிய இடங்களை அடையாளம் கண்டார்.

இந்த ஆய்வின் போது, கோவை மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் கணேசன், தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் ஜெகதீசன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஜெகன், தேவதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார் (பொ), இளங்கோவன் (பொ), போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

இந்த முயற்சி பொது போக்குவரத்து பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...