கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டதாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பூனாரியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில், தங்களுக்கு சொந்தமாக கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (54) மற்றும் காயத்ரி (40) ஆகிய இரு தரப்பினரும் மாநகராட்சி அனுமதியின்றி மணல் மற்றும் செங்கற்களை கொட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சிறப்பு போலீஸ் ஏட்டு கிஷோர் குமார், இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, மாநகராட்சி இடத்தில் கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டதற்கான காரணம் மற்றும் தகராறு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...