கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டதாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பூனாரியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில், தங்களுக்கு சொந்தமாக கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (54) மற்றும் காயத்ரி (40) ஆகிய இரு தரப்பினரும் மாநகராட்சி அனுமதியின்றி மணல் மற்றும் செங்கற்களை கொட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சிறப்பு போலீஸ் ஏட்டு கிஷோர் குமார், இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, மாநகராட்சி இடத்தில் கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டதற்கான காரணம் மற்றும் தகராறு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...