கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் Dr. சுமதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026 – தி கோல்டன் அவர் அண்ட் பியான்ட் ரேஸ் எகைன்ஸ்ட் டைம் இன் நியூரோ எமர்ஜென்சிஸ்" (பொன்னான நேரமும் அதற்கு அப்பாலும்: நரம்பியல் சார்ந்த அவசரநிலையில் சிகிச்சைக்கான துரித ஓட்டம்) என்ற தலைப்பிலான தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Dr. சுமதி, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை, கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்பது, அவர்களிடம் பரிவு மற்றும் அன்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர், ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கி, மாநாடு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நியூரோ ஃபிராண்டியர்ஸ் - 2026 என்ற இந்த தேசிய மாநாடு அறிவு வளர்ச்சி, தொழில் முறை வலையமைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் நரம்பியல் அவசர நெறிகளுக்கான பல்துறை அணுகுமுறைகளை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மேலும் நரம்பியல் அவசர நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்றும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் கல்வி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த மாநாடு நரம்பியல் சார்ந்த செவிலியர் கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறைகளில் புதிய சிந்தனைகளும் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளையும் உருவாக்கும், ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இந்த தேசிய மாநாடு நரம்பியல் அவசர நிலைகளின் துரிதமான கண்டறிதல் மற்றும் மேலாண்மை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...