கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் Dr. சுமதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
Coimbatore: கோயம்புத்தூர் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026 – தி கோல்டன் அவர் அண்ட் பியான்ட் ரேஸ் எகைன்ஸ்ட் டைம் இன் நியூரோ எமர்ஜென்சிஸ்" (பொன்னான நேரமும் அதற்கு அப்பாலும்: நரம்பியல் சார்ந்த அவசரநிலையில் சிகிச்சைக்கான துரித ஓட்டம்) என்ற தலைப்பிலான தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
Dr. சுமதி, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை, கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்பது, அவர்களிடம் பரிவு மற்றும் அன்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர், ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கி, மாநாடு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நியூரோ ஃபிராண்டியர்ஸ் - 2026 என்ற இந்த தேசிய மாநாடு அறிவு வளர்ச்சி, தொழில் முறை வலையமைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் நரம்பியல் அவசர நெறிகளுக்கான பல்துறை அணுகுமுறைகளை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மேலும் நரம்பியல் அவசர நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்றும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் கல்வி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.
தேசிய அளவில் நடைபெற்ற இந்த மாநாடு நரம்பியல் சார்ந்த செவிலியர் கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறைகளில் புதிய சிந்தனைகளும் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளையும் உருவாக்கும், ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்த தேசிய மாநாடு நரம்பியல் அவசர நிலைகளின் துரிதமான கண்டறிதல் மற்றும் மேலாண்மை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Dr. சுமதி, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை, கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்பது, அவர்களிடம் பரிவு மற்றும் அன்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர், ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கி, மாநாடு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நியூரோ ஃபிராண்டியர்ஸ் - 2026 என்ற இந்த தேசிய மாநாடு அறிவு வளர்ச்சி, தொழில் முறை வலையமைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் நரம்பியல் அவசர நெறிகளுக்கான பல்துறை அணுகுமுறைகளை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மேலும் நரம்பியல் அவசர நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்றும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் கல்வி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.
தேசிய அளவில் நடைபெற்ற இந்த மாநாடு நரம்பியல் சார்ந்த செவிலியர் கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறைகளில் புதிய சிந்தனைகளும் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளையும் உருவாக்கும், ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்த தேசிய மாநாடு நரம்பியல் அவசர நிலைகளின் துரிதமான கண்டறிதல் மற்றும் மேலாண்மை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.