கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் Dr. சுமதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026 – தி கோல்டன் அவர் அண்ட் பியான்ட் ரேஸ் எகைன்ஸ்ட் டைம் இன் நியூரோ எமர்ஜென்சிஸ்" (பொன்னான நேரமும் அதற்கு அப்பாலும்: நரம்பியல் சார்ந்த அவசரநிலையில் சிகிச்சைக்கான துரித ஓட்டம்) என்ற தலைப்பிலான தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Dr. சுமதி, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை, கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்பது, அவர்களிடம் பரிவு மற்றும் அன்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர், ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கி, மாநாடு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நியூரோ ஃபிராண்டியர்ஸ் - 2026 என்ற இந்த தேசிய மாநாடு அறிவு வளர்ச்சி, தொழில் முறை வலையமைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் நரம்பியல் அவசர நெறிகளுக்கான பல்துறை அணுகுமுறைகளை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மேலும் நரம்பியல் அவசர நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்றும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் கல்வி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த மாநாடு நரம்பியல் சார்ந்த செவிலியர் கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறைகளில் புதிய சிந்தனைகளும் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளையும் உருவாக்கும், ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இந்த தேசிய மாநாடு நரம்பியல் அவசர நிலைகளின் துரிதமான கண்டறிதல் மற்றும் மேலாண்மை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...