கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக இமானுவேல் (40) மற்றும் சாரங்கபாண்டி (52) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், இமானுவேல் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் தலைமறைவாக உள்ளார்.
தீத்திபாளையம் பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் முதல் மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.10 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், குட்கா பொருட்கள் ஓசூர் அருகே இருந்து வாங்கி வரப்பட்டு, பேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இமானுவேல் (40) மற்றும் சாரங்கபாண்டி (52) ஆகியோர் மீது பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சாரங்கபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
இமானுவேல் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, அவற்றை விற்பனை செய்வதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீத்திபாளையம் பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் முதல் மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.10 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், குட்கா பொருட்கள் ஓசூர் அருகே இருந்து வாங்கி வரப்பட்டு, பேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இமானுவேல் (40) மற்றும் சாரங்கபாண்டி (52) ஆகியோர் மீது பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சாரங்கபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
இமானுவேல் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, அவற்றை விற்பனை செய்வதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.